About RajaKambalam
தொட்டிய நாயக்கர்
தமிழ்நாட்டில் சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தொட்டிய நாயக்கர் வசித்து வருகின்றனர்.தெலுங்கு மொழி பேசும் இவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இந்த சாதியினர் ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர் என்ற உட்பிரிவுகளின் பெயரிலும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தற்போது ராஜகம்பளம் என்கிற பெயரையே தங்கள் சாதிப் பெயராகப் பயன்படுத்தி வருகின்றனர்.இவர்கள் ஆந்திராவில் மிக பெரிய சமுதாயமான காப்பு இனத்தவர்களின் கிளை சாதியினராக கருதபடுகிறார்கள் . பலிஜா, கவரா , வளையல் நாயக்கர் , தொட்டிய நாயக்கர் போன்றோர் காப்பு இனத்தில் உள்ள கிளை ஜாதியினர்.
திருமணம்
இந்த குலத்தினரிடையே, திருமணப் பொருத்தம் பார்க்கும் போது, நேர் சுட்டம் என்ற ஒரு முறை பார்க்கப்படுகிறது. இதன்படி, ஒரு குலத்தவர், அவருக்கு நேர் சுட்டம் இருக்கும் குலத்தினருடன்தான் சம்பந்தம் செய்ய வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. தற்போது, வேறு சுட்டத்தினருடனும் திருமணம் செய்வதும் நடக்கிறது.
கம்பளத்து சமுதாய மக்களின் திருமணங்களில் சடங்குகள் நிறைந்ததாக இருக்கும்.
தளவாலு அட்டந்து
ஊரில் உள்ள உறவினர்கள் , சொந்த பந்தம் அனைவரும் மணமக்களுக்கு ஆசி வழங்கும் சடங்கு. ஒரு தட்டில் பால் வெய்து அதனை வெற்றிலை மூலம் தொட்டு மணமக்களின் மேல் தொட்டு உறவினர்கள் ஆசி கொடுப்பார் . இந்த சடங்கு செய்யும் பொது தெலுங்கு மொழியில் தங்கள் குல பெருமைகளையும் , தங்கள் வரலாறுகளையும், தங்கள் குல வீரர்களையும் , தங்கள் குலத்துக்கு உதவி செய்த மற்ற இனத்தவரையும் புகழ்ந்து பாடுவர்.
தேவுடு
மொக்கந்து
- கடவுளை
வணங்குவது
இந்த சடங்கில் தங்கள் குல தெய்வங்களையும் , முனோர்களையும் உரிமையோடு அழைப்பர் . இவர்களின் நம்பிக்கை படி தாங்கள் கடவுளின் பிள்ளைகள் என்றும் , தாங்கள் சொன்னால் பழிக்கும் என்றும் , தாங்கள் அழைத்தால் கடவுளே வருவர் என்று கூறி உரிமையோடும், அதிகாரத்தோடும் கடவுளை அழைத்து மணமக்களை வாழ்த்த சொல்வர்.
நல்ல நேரம் , கெட்ட நேரம்
நல்ல நேரம், கெட்ட நேரம், ஜாதகம் பார்க்கும் முறை எதனையும் இம்மக்கள் செய்வது இல்லை. இதுபோல் திருமணம் பகல், இரவு என அவர்களுக்கு ஏற்ற நேரத்தைத் தேர்வு செய்து கொள்கிறார்கள். மணமக்கள் தங்கள் இனத்தில் காதல் செய்தால் அதனை இவர்கள் ஏற்று கொள்கிறார்கள். பிற சாதிகளில் காதல் கொண்டால் அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை என்பதுடன் அவர்கள் இறந்து விட்டதாகக் கொண்டு இறந்தவருக்குச் செய்யும் சடங்குகளைச் செய்து அவர்களை ஒதுக்கி விட்டுவிடும் வழக்கமும் உள்ளது.
திருமணத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வு
இவர்களின்
திருமணத்தில்
வரதட்சணை
கிடையாது.
மணமகன்
வீட்டினர்தான்
திருமண
நிகழ்ச்சியை
நடத்துவர்
பழைய
பழக்க
வழக்கங்கள்
தொடர்ந்து
கடைப்பிடிக்கப்படுகிறது.
மணமகன்
மணமகளுக்கு
காசு
கொடுத்துதான்
திருமணம்
செய்ய
முடியும்.
கம்பளத்து
நாயக்கர்கள்
பிராமணர்களைக்
கொண்டு
திருமணம்
செய்வது
இல்லை,
திருமண
நிகழ்ச்சிகளில்
கலந்து
கொள்ள
விடுவதில்லை
என்பதையும்
சாதி
வினோதங்கள்
என்ற
பாரதியாரின்
கட்டுரையிலே
குறிப்பிடுகிறார்.
குழந்தைப்பிறப்பும் சடங்குகளும்
இவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில் ஆர்வம் கொள்வதில்லை. இதற்கு இவர்களின் சாதிக் கட்டுப்பாடுகள்தான் காரணமாக இருக்கிறது. இவர்கள் குழந்தைகளுக்கு குல தெய்வப் பெயரை முதல் பெயராக வைத்துக் கொள்கின்றனர். வெளிப்பழக்கத்திற்கென புதுப் பெயர்களை இரண்டாம் பெயராக வைத்துக் கொள்கின்றனர்.
சமுதாயத்தினர் நிலை நூறு வருடங்களுக்கு முன்பு
ஜமின் தாரர்களாகவும், செல்வந்தர்களாகவும், அரசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும் நூறு ஆண்டு முன்பு வரை இருந்து வந்த இந்த சாதியினர், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் அதற்கான உரிமைகளை இழந்தனர்.[4] . குறுநிலப் பகுதிகளை ஆட்சி செய்து வந்த பாளையக்காரர்களாக இச்சாதியைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். தமிழ்நாட்டின் தென் பகுதியிலிருந்த 72 பாளையங்களில் 62 பாளையங்கள் இச்சாதியினர் தலைமையில் இருந்துள்ளனர்.(Census of India, 1961: Madras)இவர்கள் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் விடுதலைப் போராட்டத்துக்காக பல போராட்டங்களின் பங்கு பெற்றுள்ளனர். கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் ஆதிக்க சாதியினராக இருந்து வந்து உள்ளனர்.
இன்றைய
நிலை
பொருளாதாரம் மற்றும் கல்வியில் பின் தங்கிய நிலையிலுள்ள இவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியிலில் இடம் பெற்றுள்ளனர். இட ஒதிக்கீடு சலுகைகளால் சிலர் கல்வி பெற்றுள்ளனர். இருப்பினும் இவர்கள் இன்னும் கல்வி நிலையில் பின் தங்கியே உள்ளனர். பொருளாதாரத்திலும் முன்னேற்றம் என்பது குறைவுதான். இச்சாதியினர் விவசாயத்தையே முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். சிலர் குறி சொல்வது போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள்
ஜக்கம்மா
தேவி
, பொம்மக்கா
போன்ற
தெய்வத்தினை
சாதியின்
பொது
தெய்வமாகக்
கொண்டுள்ளனர்.
குழு
வாழ்க்கை
இந்த சாதியினர் ஒரு குழுவாகத் தங்களுக்கென ஒரு பகுதியை உருவாக்கிக் கொண்டு அங்கு தனியாக வசித்து வந்தனர். இதனால் இவர்கள் பிற சாதியினரை தங்கள் ஊருக்குள் அனுமதிக்காமல் இருந்து வந்தனர். இச்சாதிப் பெண்களை மாத விலக்கு காலத்தில் ஊரின் ஒரு பகுதியில் தனியாகத் தனிமைப்படுத்தி வைக்கும் வழக்கமும் இச்சாதியினரிடம் இருந்தது. தற்போது இந்த நிலை மாறியுள்ளது. கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இவர்கள் அக மண முறையை தீவீரமாகப் பின்பற்றுகின்றனர்.
தேவராட்டம்
இச்சமுதாயத்தினர்
தேவராட்டம்
எனும்
ஒரு
வகை
நடனம்
ஆடுகின்றனர்.
இவர்கள்
வீட்டு
விழாக்களில்
இந்த
நடனம்
ஒரு
முக்கிய
நிகழ்வாக
இருக்கிறது.